தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் திருமூலம் பூஜை!
ADDED :4159 days ago
தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, இளநீர், பன்னீர், திருமஞ்சணம், பால், சந்தனம் ஆகிய அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.