உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆலங்குடி கோயிலில் மே 28-ல் குருபெயர்ச்சி லட்சார்ச்சனை

ஆலங்குடி கோயிலில் மே 28-ல் குருபெயர்ச்சி லட்சார்ச்சனை

நீடாமங்கலம் : திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில்  இந்தாண்டு  குருபகவான் மிதுனராசியிலிருந்து கடக ராசிக்கு ஜூன் 13-ம் தேதி முதல் பிரவேசம் செய்வதை முன்னிட்டு   குருபகவானுக்கு முதல் கட்ட லட்சார்ச்சனை விழா வரும் 28-ம் தேதி தொடங்கி ஜூன் 5 வரை நடைபெறவுள்ளது.மீண்டும் குருபெயர்ச்சிக்குப் பின்னர் ஜூன் 16-ம் தேதி தொடங்கி ஜூன் 22-ல் 2-வது கட்டமாக லட்சார்ச்சனை விழா நடைபெறவுள்ளது.மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் மற்றும் இதர ராசிக்காரர்களும் லட்சார்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்து கொள்ளலாம். காலை 9 மணி முதல் மதியம் 12 மணிவரையிலும், பின்னர் மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணிவரையிலும்  லட்சார்ச்சனை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !