உத்தராபதீஸ்வரர் கோயிலில் செண்பகப்பூ திருவிழா!
ADDED :4207 days ago
நாகை: திருச்செங்காட்டாங்குடி உத்திராபதீஸ்வரர் கோயிலில் செண்பகப் பூ திருவிழா நேற்று நடைபெற்றது. திங்கள்கிழமை காலை உத்தராபதீஸ்வரர் சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், சுவாமி புறப்பாடு நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை அதிகாலை மன்னன் ஐயடிகள் காடவர்கோனுக்கு செண்பகப்பூ வாசனையுடன் இறைவன் காட்சியளித்த ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது.