காளியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா!
ADDED :4156 days ago
கிராகந்தர்வகோட்டை: மட்டாங்கால் கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன், நாச்சார் அம்மன் கோயில் வைகாசி திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவில் காலை காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளுடன் நடைபெற்றது. தொடர்ந்து நாச்சார் அம்மனுக்கு சிறப்பு மஞ்சள் நீர் அபிஷேகமும்,கிடாவெட்டு பூஜையும் நடைபெற்றது.