உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனிஸ்வர பகவான் கோவிலில் தேர் தயார் செய்யும் பணி தீவிரம்!

சனிஸ்வர பகவான் கோவிலில் தேர் தயார் செய்யும் பணி தீவிரம்!

காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் வருகிற 8ம் தேதி நடக்கும் தேர் திருவிழாவையொட்டி தேர் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இக்கோவிலின் பிரமோற்சவ விழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வருகிற 1ம் தேதி இரவு அடியார் நால்வர் உற்சவம். ஜுன் 6 தேதி அடியார்கள் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடத்தப்பட்டு புஷ்ப பல்லக்கில் வீதி உலா  தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா. 8ம் தேதி காலை 7 மணிக்கு செண்பக தியாகராஜர் தேரில் எழுந்தருள தேர் திருவிழா நடக்கிறது. தேர் திருவிழாவிற்காக தேர் தயார் செய்யும் பணி துவங்கியுள்ளது. இதற்காக, தேரை சுற்றி அமைக்கப்பட்டிருந்த ஷெட் அகற்றப்பட்டு, தேரில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தும் பணி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !