உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடவெட்டி கோவிலில் அமாவாசை ஊஞ்சல் விழா!

வடவெட்டி கோவிலில் அமாவாசை ஊஞ்சல் விழா!

செஞ்சி: செஞ்சி தாலுகா வடவெட்டி ரங்கநாதபுரத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு நேற்ற முன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். பகல் 1 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு அன்னதானம் வழங்கினர். இரவு 8 மணிக்கு பட்டிமன்றமும், 9 மணிக்கு வாணவேடிக்கையும், 10 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. இதில், அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் புண்ணியமூர்த்தி மற்றும் வடவெட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். இரவு மன்சுராபாத் மணிவேல் குழுவினரின் நாடகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !