செல்லபிராட்டி அம்மன் கோவிலில் பன்னீர் அபிஷேகம்!
ADDED :4148 days ago
செஞ்சி: செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை அம்மனுக்கு பன்னீர் அபிஷேகம் நடந்தது. செஞ்சியை அடுத்த செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை அம்மன் கோவிலில் அமாவாசை மற்றும் அக்னி நட்சத்திர நிறைவை முன்னிட்டு மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும், அம்மனுக்கு பன்னீர் அபிஷேகம் நடந்தது. மாலை 6 மணி முதல் 8: 30 மணிவரை தில ஹோமம், லலிதா சகஸ்ரநாம ஹோமம் நடந்தது. இரவு 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர். தொடர்ந்து 9:30 மணிக்கு புஷ்பாஞ்சலியும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் அறங்காவலர் கன்னியப்பன் மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்டனர். பூஜைகளை ஈஸ்வர சிவன் செய்தார்.