சீனிவாச பெருமாள் கோவிலில் கம்பராமாயண சொற்பொழிவு
ADDED :4148 days ago
உளுந்தூர்பேட்டை: எம்.குன்னத்தூர் கிராமத்தில் சீனிவாச பெருமாள் சுவாமி கோவிலில் கம்பராமாயண சொற்பொழிவு 9 நாட்கள் நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா எம்.குன்னத்தூர் கிராமத்தில் சீனிவாச பெருமாள் கோவிலில் கம்பராமாயண சொற்பொழிவு 9 நாட்கள் நடந்தது. பரனூர் அம்பலவாணன் சொற்பொழிவாற்றினார். திருக்கல்யாணம், பரதன் பாதுகை, சபரி மோட்சம், வாலி மோட்சம், அனுமன் தூது, ராமன் பட்டாபிஷேகம் என்ற தலைப்புகளில் சொற்பொழிவு நடந்தன.