உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா

திருத்தணி கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா

திருத்தணி : கங்கையம்மன் ஜாத்திரை திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர். திருத்தணி ஒன்றியம், ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில், கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா, நேற்று முன்தினம் நடந்தது. விழாவை ஒட்டி, காலை 9:00 மணிக்கு, கங்கையம்மன் மற்றும் தேசம்மன் கோவில் வளாகத்தில் கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு, மூலவர் தேசம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. காலை 11:30 மணிக்கு, பூ கரகம் கிராம வீதிகளில் திருவீதியுலா வந்தது. மாலை 5:30 மணிக்கு, திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இரவு 8:00 மணிக்கு, களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மனுக்கு, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின், அம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 11:00 மணிக்கு, நாடகம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !