ஆர்.எஸ்.மங்கலம் முருகன் கோவிலில் பூக்குழி விழா!
ADDED :4139 days ago
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள சேத்திடல் பாலமுருகன் கோயில் விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆதாரனைகள் நடந்தது. விரதமிருந்த பக்தர்கள், பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். முத்துபட்டினம் முருகன் கோவிலில், வைகாசி விசாக விழாவை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக சிறப்பு அபிஷேகம், ஆதாரனைகளுடன் சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று பக்தர்கள், பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.