உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் முருகன் கோவிலில் வைகாசி விசாகம்!

திருக்கோவிலூர் முருகன் கோவிலில் வைகாசி விசாகம்!

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கீழையூர் பாலசுப்ரமணியர் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு  சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.  முருகப்பெருமானின் ஜனன தினமான நேற்று காலை 7 மணிக்கு மூலவர் வள்ளிதேவசேனா சமேத பாலசுப்ரமணியர்க்கு சிறப்பு அபிஷேகம் நடந் தது. 8 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை, அர்ச்சனை நடந்தது. மாலை 6 மணிக்கு வெள்ளிக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலி த்தார். ராஜா குருக்கள் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !