சரநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு!
ADDED :4124 days ago
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று ஆனிமாத அமாவாசையை முன்னிட்டு தன்வந்திரி பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆனிமாத அமாவாசையை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு சுப்ரபாரதம், 6:30 மணிக்கு விஸ்வரூபம், 7:00 மணிக்கு மூலவர் பெருமாள் தன்வந்திரி பெருமாள் அலங்காரத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். 9:00 மணிக்கு உற்சவர் சரநாராயண பெருமாள் திருக்கண்ணாடி அறையில் விசேஷ அலங்காரத்தில் அருள்பாலித்தார். மதியம் 1:00 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பும், 6:30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 9:00 அர்த்தஜாம பூஜையும் நடந்தது. பக்தர்களுக்கு மூலிகை லேகியம் வழங்கப்பட்டது.