உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சரநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு!

சரநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு!

பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று ஆனிமாத அமாவாசையை முன்னிட்டு தன்வந்திரி பெருமாள் அலங்காரத்தில்  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆனிமாத அமாவாசையை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு சுப்ரபாரதம், 6:30 மணிக்கு விஸ்வரூபம், 7:00  மணிக்கு மூலவர் பெருமாள் தன்வந்திரி பெருமாள் அலங்காரத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். 9:00 மணிக்கு உற்சவர் சரநாராயண  பெருமாள் திருக்கண்ணாடி அறையில் விசேஷ அலங்காரத்தில் அருள்பாலித்தார். மதியம் 1:00 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 4:00 மணிக்கு  நடைதிறப்பும், 6:30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 9:00 அர்த்தஜாம பூஜையும் நடந்தது.  பக்தர்களுக்கு மூலிகை லேகியம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !