உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்காலில் வரும்12ம் தேதி மாங்கனி திருவிழா துவக்கம்!

காரைக்காலில் வரும்12ம் தேதி மாங்கனி திருவிழா துவக்கம்!

காரைக்கால்: காரைக்காலில் வரும்12ம் தேதி மாங்கனி திருவிழா துவங்குகிறது. விழாவிற்கான  ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது. காரைக்கா லில் 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் அம்மையாரின் கணவனிடம்  சிவபெருமான் மாங்கனி கொடுத்து அனுப்பி, அதை அடியார் வேடத்தில் சிவபெருமான் வந்து சாப்பிடுவதும், இதனால் காரைக்கால் அம்மையாரை  பிரிந்து அவரது கணவர் வெளியூர் செல்வதும், அம்மையார் இறைவனை காண கயிலாயத்திற்கு தலைகீழாக கைகலால் நடந்து செல்வதையும் சி த்தரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி திருவிழா நடக்கிறது. வரும் ஜூலை 10ம் தேதி மாப்பிள்ளை அழைப்பும், 11ம் தேதி காரைக்கால்  அம்மையார், பரமதத்தர் செட்டியார் திருக்கல்யாணமும், இரவு பிஷாடணமூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடும், மறுநாள் 12ம் தேதி சிவபெருமான்  அடியார் கோலத்தில் வீதி உலா வருவதும், அப்போது பக்தர்கள் மாங்கனி விசும் வைபவம் நடக்கிறது. அன்று மாலை அம்மையார் சிவபெரு மானுக்கு மாங்கனியுடன் அமுதுபடையல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்காக ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் செய்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !