மூன்றாம் பிறையைத் தரிசிப்பதன் நோக்கம் என்ன?
ADDED :4266 days ago
நீண்ட ஆயுள் கிடைக்கவும், நோயற்ற வாழ்வு பெறவும் மூன்றாம்பிறையைத் தரிசிக்க வேண்டும். ஒருவர் தன் வாழ்வில், மூன்று வயது முதல் எண்பது வயது வரை தரிசித்து வந்தால் ஆயிரம் முறை தரிசித்து விடலாம். அப்போது சதாபிஷேகம் செய்து கொள்ளலாம். ஆயிரம் பிறை கண்ட அண்ணல் எனக் குறிப்பிடுவதற்கு இதுவே காரணம்.