ராகுகால துர்க்கை வழிபாடு
ADDED :5304 days ago
எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றித் தருவது ராகுகால துர்கா பூஜையாகும். ராகு காலத்தில் துர்காதேவியை ராகுபகவான் வழிபடுவதால் அந்த நேரத்தில் நாம் செய்யும் வழிபாடும் விசேஷமானதாகும். எண்ணியபடி செயல்கள் நடைபெற, தீராத நோய் தீர, சஞ்சலங்கள் அகல, மனக்கஷ்டங்கள் நீங்க, எதிரிகள் கொட்டம் அடங்க அருள்புரிபவள் துர்காதேவி. துர்க்கை சன்னதியில் ஏற்றும் தீபத்தில் நெய் அல்லது எண்ணெய் சேர்ப்பது நல்லது. ராகு திசாபுத்தி நடப்பவர்கள் ராகுகால துர்காதேவி வழிபாட்டினால் நற்பலன் பெறலாம்.