அழகர்கோவில் சோலைமலையில் ஆடிக்கார்த்திகை!
ADDED :4225 days ago
அழகர்கோவில் : அழகர்கோவில் மலை மீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் ஆடிக்கார்த்திகை விழா நடந்தது.காலையில் மூலவர் முருகன், வள்ளி, தெய்வானைக்கு 18 வகை அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தன. மதுரையில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர். பகலில்சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி கோயிலை வலம் வந்து அருள் பாலித்தார்.