உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓசூர் முத்து மாரியம்மன் கோவில் உற்சவ விழா!

ஓசூர் முத்து மாரியம்மன் கோவில் உற்சவ விழா!

ஓசூர்: ஓசூர் முத்து மாரியம்மன் கோவில் உற்சவ விழா வெகுவிமர்சையாக துவங்கியது. ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாருதி நகரில், முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் உற்சவ விழா, கடந்த, 31ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி, 31ம் தேதி காலை, 8 மணிக்கு, அம்மனை ஆற்றில் இருந்து அழைத்து வரும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து, கொடிமரபூஜை, காப்பு கட்டுதல், சக்தி பூஜை ஆகிய நிகழ்ச்சியும் நடந்தது. 1ம் தேதி முதல், 6ம் தேதி வரை தினமும், காலை, 5.30 மணிக்கு விஷேச அபிஷேக பூஜையும், மாலை, 6 மணிக்கு அம்மன் ஊர்வலமும் நடக்கிறது. தொடர்ந்து, 7ம் தேதி காலை, 9.15 மணிக்கு, ஓசூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து தாய் வீட்டு சீதனமும், விஷேச பூஜையும் நடக்கிறது. இதைத்தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பின், மாலை, 6 மணிக்கு, மாருதி நகர், கலைஞர் நகர், கிருஷ்ணாநகர், அண்ணாமலை நகர், சிப்காட் ஹவுசிங் காலனி, அரசனட்டி வழியாக அம்மன் ஊர்வலம் நடக்கிறது. 8ம் தேதி அதிகாலை, 2.30 மணிக்கு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், துர்கா ஹோமம் நடக்கிறது. காலை, 5.30 மணிக்கு, ஓசூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து, முத்து மாரியம்மன் கோவிலுக்கு, சக்தி கரகம், பால்குடம், அலகு குத்துதல், அக்னிகரகம் ஆகியவை எடுத்து வரப்படுகிறது. 10ம் தேதி காலை, 6 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழாவும், அம்மனை ஆற்றுக்கு அழைத்து செல்லுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து, அம்மனுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !