உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் ஆடி லட்சார்ச்சனை வேள்வி!

பழநியில் ஆடி லட்சார்ச்சனை வேள்வி!

பழநி: உலக நலன்வேண்டி, பழநி பெரியநாயகிம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை வேள்வி நடந்தது. பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை விழா ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 15 வரை நடக்கிறது. ஆடி 1ல் சிவன், விநாயகரிடம் அனுமதி பெற்று, பெரியநாயகிஅம்மன் சன்னதியில் சங்கல்பம் நடந்தது. அதைத் தொடர்ந்து நாள்தோறும் மாலை 6.30மணிக்கு மேல், நூறாயிரம் மலர்களால் சிறப்பு அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. விழாவின் முக்கியநிகழ்ச்சியாக ஆடிலட்சார்ச்சனை வேள்வி நடந்தது. 108 கலசங்கள் வைத்து, கணபதிஹோமம், 1008 சகஸ்கரநாம அர்ச்சனைகள் நடந்தது. ஒவ்வொரு ஆடி வெள்ளியன்று அம்மன் ஆபரணாதி, முத்தங்கி, சந்தனகாப்பு, மீனாட்சிபோன்ற அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடைசி வெள்ளியான ஆகஸ்ட் 15 மாலையில் சுமங்கலி பூஜை, மகாஅபிஷேகமும், அம்மனுக்கு தங்கக்கவசம் அலங்காரம் செய்யப்படுகிறது. அன்றிரவு 8.30 மணிக்குமேல் பெரியநாயகி அம்மன்கோயிலிருந்து நான்குரதவீதிகளிலும் வெள்ளித் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !