மிளகுமாரியம்மன் கோவில் சாகை வார்த்தல் விழா!
ADDED :4064 days ago
உளுந்துõர்பேட்டை: உளுந்துõர்பேட்டை மிளகு மாரியம்மன் கோவில் தெருவிலுள்ள மிளகுமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா நடந் தது. இதையொட்டி கடந்த 15ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 18ம் தேதி மதியம் 12 மணிக்கு சக்தி கரகம் ஈஸ்வரன் கோயில் அருகே இருந்து புறப்பட்டு கோவிலை சென்றடைந்தது. பக்தர்கள் கூழ் குடங்களை ஏந்தி வந்து அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர். அன்றிரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.