கிரகதோஷம் இனியில்லை!
ADDED :4187 days ago
நவக்கிரகங்களில் கேதுவின் அதிபதியாக விநாயகர் விளங்குகிறார். கேது திசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள் விநாயகரை செவ்வாய்க்கிழமையில் வழிபட்டால் கேதுதோஷம் நீங்கி நன்மை உண்டாகும். சனிதோஷத்தால் சிரமப்படுபவர்கள் வன்னி இலையால் சனிக்கிழமையன்று விநாயகரை அர்ச்சித்து வழிபட வேண்டும்.விநாயகருக்கு விருப்பமான வன்னி இலையே சனீஸ்வரருக்உகந்ததாக இருக்கிறது. விநாயகருக்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் எருக்கம் பூமாலை அணிவித்து வழிபட்டால் சூரியதோஷம் அகலும்.சூரியன் மூலவராக இருக்கும் சூரியனார் கோயில் தலவிருட்சம் எருக்கஞ்செடி என்பது குறிப்பிடத் தக்கது.