வரசித்தி விநாயகர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.99 லட்சம்
ADDED :4071 days ago
நகரி : வரசித்தி விநாயகர் கோவிலில், கடந்த, 31 நாட்களில், 99.72 லட்சம் ரூபாய் காணிக்கையை உண்டியலில் பக்தர்கள் அளித்துள்ளனர். சித்துார் மாவட்டம், காணிப்பாக்கம் பகுதியில் வரசித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு, தினமும் ஆயிரத்துக்கும், மேற்பட்ட பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து, உண்டியலில் ரொக்கம், தங்கம், வெள்ளி போன்றவற்றை காணிக்கையாக அளிக்கின்றனர்.அந்த வகையில், கடந்த, 31 நாட்களில் பக்தர்கள் அளித்த காணிக்கை, நேற்று முன்தினம், கோவில் அதிகாரி பூர்ணசந்திரராவ் முன்னிலையில் ஊழியர்கள் எண்ணினர்.இதில், 99,72.836 ரூபாய், 55 கிராம் தங்கம், 1,450 கிராம் வெள்ளி, 1,847 அமெரிக்கா டாலர், 3,260 அரேபியா நாணயங்கள், 20 ஆஸ்திரேலியா டாலர் ஆகியவை இருந்தன.