உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

திண்டிவனம் லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் யாதவ மகா சபை சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. மூலவர் லக்ஷ்மி நரசிம்மருக்கு மகா அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. இரவு 8 மணிக்கு, ஏணியில் ஏறி உறியில் தொங்கும் வெண்ணெய் தாழியை எடுக்கும் கோலத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். கோவில் வாசல் உள்பட 4 இடங்களில் உறியடி திருவிழா நடந்தது. விழா ஏற்பாடுகளை திண்டிவனம் யாதவ மகா சபையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !