மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்
4028 days ago
கொழுக்கட்டைகளை சூறைவிட்டு அய்யனாருக்கு வினோத வழிபாடு
4028 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வேணுகோபாலன் தங்க கருட வாகனத்தில் வீதியுலா நடந்தது. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஸ்ரீஜெயந்தி அவதார பிரம்மோற்சவ விழா கடந்த 16ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் இரவு கருடசேவை நடந்தது. காலை 8 :00 மணிக்கு வேணுகோபாலன் நாச்சியார் திருக்கோலத்தில் வீதியுலா நடந்தது. மதியம் ஸ்ரீபாமா ருக்மணி சமேத வேணு÷ காபாலனுக்கு விசேஷ திருமஞ்சனம், சேவை சாற்றுமறை ஆகியவை நடந்தது. இரவு 9:00 மணிக்கு தங்க கருட வாகனத்தில் வேணுகோபாலன் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளினார். வாண வேடிக்கை முழங்க வீதியுலா நடந்தது. நேற்று காலை ஸ்ரீ பாமா ருக்மணி சமேத வேணுகோபாலன் சூரிய பிரபையில் வீதியுலாவும், இரவு யானை வாகனத்தில் சுவாமி வீதியுலாவும் நடந்தது. ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடந்த இவ்விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
4028 days ago
4028 days ago