உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தர் சஷ்டி கொடியேற்றம்!

சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தர் சஷ்டி கொடியேற்றம்!

புதுச்சேரி: சாரம், சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்தர் சஷ்டி சூரசம்ஹார பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் நேற்று காலை துவங்கியது.  வரும் 3ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில், தினமும் மாலை 5:00 மணிக்கு, சுவாமிக்கு மகா அபிஷேகமும், 7:00 மணிக்கு, யாகசாலை பூ ஜைகளும், இரவு, சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. ஆறாம் நாள் திருவிழாவான, 29ம் தேதியன்று, மாலை 7:00 மணிக்கு வேல் வாங்கும் உற்சவமும்,  சூரசம்ஹார பெருவிழாவும், இரவு 9:30 மணிக்கு, மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, அறங்காவலர்  குழுவினரும், தேவஸ்தான அர்ச்சகர்களும் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !