நாலாயிர திவ்விய பிரபந்தம் ஜெயந்தி!
ADDED :4296 days ago
ராமநாதபுரம் : ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்விய பிரபந்தம் ஜெயந்தி ராமநாதபுரம் ராணிச்சத்திரம் கோதண்டராம சுவாமி கோயிலில் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் தமிழில் நடந்தன. சமஸ்தானம் தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராஜ ராஜேஸ்வரி, திவான் மகேந்திரன், செயல் அலுவலர் சாமிநாதன், பேஷ்கர் கண்ணன், ஸ்ரீராம பக்த சபா நிறுவனர் நாராயணன், ஸ்ரீனிவாச பட்டர், ராமன், பேரு சீனிவாசன், ராமன் அய்யங்கார் பங்கேற்றனர்.