கல்லறைத் திருவிழாவில் முன்னோருக்கு அஞ்சலி!
ADDED :3995 days ago
மதுரை : மதுரையில் பல்வேறு இடங்களில் நடந்த கல்லறைத் திருவிழாவில் கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.இறந்த முன்னோர்களின் நினைவாக ஆண்டு தோறும் அவர்களின் நினைவிடங்களில், உறவினர்கள் மரியாதை செய்வது வழக்கம். நேற்று தத்தனேரி, பழங்காநத்தம், மகபூப்பாளையம் போன்ற இடங்களில் உள்ள கல்லறைகளில், மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர்மாலைகள் வைத்தும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். சிறப்பு வழிபாடுகளும் நடந்தன.