வளத்தி பகுதியில் பிரதோஷ வழிபாடு!
ADDED :4320 days ago
அவலூர்பேட்டை:அவலூர்பேட்டை, வளத்தி பகுதியில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
அவலூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு சிறப்பு சுவர்ணாபிஷேகம், பாலாபிஷேகம், தீபாராதனை நடந்தது. நொச்சலூர் திரிபுர சுந்தரி சமேத சந்திர மவுலீஸ்வரர் மற்றும் வளத்தி மங்களாம்பிகை சமேத மருதீஸ்வரர் கோவிலில்களிலும் பாலாபிஷேகம், தீபாராதனையும், சிறப்பு அலங்காரமும் நடந்தது.