உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர் கோவிலில் மகா அன்னாபிஷேகம்!

கைலாசநாதர் கோவிலில் மகா அன்னாபிஷேகம்!

விழுப்புரம்: விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் மகா அன்னாபிஷேகம் நடந்தது. ஐப்பசி மாத அசுவினி நட்சத்திரத்துடன் கூடிய, பவுர்ணமியில் ÷ நற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு விழுப்புரம் பிரகன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் மகா அன்னாபிஷேகம் நடந்தது. செயல் அலுவலர்  முத்துலட்சுமி, தக்கார் சரவணன், ஆலய அர்ச்சகர் வைத்தியநாத குருக்கள், உபயதாரர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !