உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு!

வீரட்டானேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு!

பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று பவுர்ணமியை முன்னிட்டு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு   அருள்பாலித்தார். பண்ருட்டி திருவதிகை அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று பவுர்ணமியை முன்னிட்டு மாலை   4:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. மாலை 6:00 மணிக்கு நான்கு மாட வீதிகள் வலம் வ  ருதல், 6:30 மணிக்கு உற்சவர் அம்மன் 16 கால் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள்   சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !