உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போர்வீரனின் கதை!

போர்வீரனின் கதை!

மலையாளத்தில் ஐயப்பன் வரலாற்றை சாஸ்தா பாட்டு என்கின்றனர். இதில், மலையாளப் போர் வீரனாக ஐயப்பன் சித்தரிக்கப்படுகிறார். அவரது வெற்றிக்கு கருப்பன், வாபர் என்னும் இருவர் துணை நின்றதாக கூறப்பட்டுள்ளது. பாண்டிச்சேவம், புலிச்சேவம், இளையரசுச்சேவம், வேளிச்சேவம், ஈழச்சேவம், பந்தளச்சேவம், வேளார்சேவம் என்னும் ஏழு சேவங்கள் இந்தப் பாடல்களில் உள்ளன. ‘சேவம்’ என்றால் ‘சேவகம்’. பாண்டியமன்னரிடம் ஐயப்பன் போர்வீரனாக பணி செய்ததாக கதை சொல்வார்கள். உடுக்கை அடித்தபடியே பாடல்களைப் பாடுவர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !