அம்மனுக்கு திருவாபரணம்!
ADDED :4135 days ago
சபரிமலையில் மாளிகைப்புறத்தம்மன் சந்நிதி உள்ளது. ஐயப்பனைப் போலவே இவளுக்கும் ஆபரணங்கள் பந்தளத்திலிருந்து கொண்டு வரப்படும். ஐயப்பனுக்கு திருவாபரணம் சாத்தப்பட்டு பூஜை நடக்கும்போது, மாளிகைப்புறத்தம்மனுக்கும் பூஜை நடக்கும். மகரஜோதி விழா முடிந்தபிறகும், சபரிமலையில் ஆறு நாட்கள் நடை திறக்கப்பட்டிருக்கும். இந்த ஆறு நாட்களிலும் இவள் ஐயப்பனைத் திருமணம் செய்யவேண்டும் என்ற ஆவலுடன் சரங்குத்தி வரை பவனி வருவாள்.