உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு!

உடுமலை சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு!

உடுமலை : உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷம் முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. உடுமலை தில்லை நகரில் உள்ள ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி, மாலை 4.30 மணிக்கு சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களில், அபிேஷகம் நடந்தது. ரத்தின லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டது. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் உள்ள சிவன் சன்னதி, பெதப்பம்பட்டி ரோடு, ஏரிப்பாளையத்தில் உள்ள சித்தாண்டீஸ்வரர் கோவில், எலையமுத்துார் பிரிவில் உள்ள புவன கணபதி கோவிலில் உள்ள சிவன் சன்னதி, ருத்ரப்பா நகரில் உள்ள பஞ்சமுக லிங்கேஸ்வரர் கோவில், மடத்துக்குளம், கொழுமத்தில் உள்ள தாண்டேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில்களில், பிரதோஷம் முன்னிட்டு, சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன.

திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிேஷக பூஜை நடந்தது. குறிச்சிக்கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சிவலிங்கேஸ்வரர் சன்னதியில், சுவாமிக்கு நேற்று மாலை 4.30 மணிக்கு, சிறப்பு அபிேஷகத்தை தொடர்ந்து, அலங்காரம் பூஜை நடந்தது.

ஆனைமலை: ஆனைமலை அடுத்த பெத்தநாயக்கனூர் பட்டீஸ்வரன் கோவில் பிரதோஷ பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஆனைமலையை சுற்றியுள்ள சிவன் ஆலயங்களான மண்கண்டேஸ்வரர், சித்தாண்டீஸ்வரர், சோமேஸ்வரர், பட்டீஸ்வரர் ஆதிசங்கரர் ஆலயங்களில் பிரதோஷ பூஜையையொட்டி நேற்றுமாலை 4:30 மணிக்கு பால், தயிர், பஞ்சாமிருதம், இளநீர், சந்தனம், விபூதி, உள்ளிட்ட 16 வகையான பூஜை திரவியங்களால் சுவாமிக்கு அபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு அலங்கார பூஜையும், பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் நடந்தன. மாலை 4.30க்கு துவங்கிய அபிஷேக பூஜைகள் 6.30க்கு முடிவடைந்தது. பிரதோஷ பூஜையில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !