பெரியானை வட்டம்!
ADDED :4134 days ago
கரிமலையைக் கடந்து சமதளப்பகுதி வருகிறது. இவ்விடத்தை பெரியானை வட்டம் என்பர். யானைகள் அதிகமாக வசித்த பகுதி என்பதால் இப்பெயர் ஏற்பட்டது. இங்கே பம்பா நதி சிறு ஓடைபோல பாய்கிறது. இங்கிருந்த படியே மகர ஜோதியை தரிசிக்கலாம் என்பதும் விசேஷத்தகவல். இங்குஇருந்து ஒரு கி.மீ. துõரத்தில் சிறியானை வட்டம் என்ற பகுதி வருகிறது. இங்கு பம்பை நதி பரந்து ஓடுவதைக் காணலாம்.