மழை பெய்யும்!
ADDED :4144 days ago
மன்னார்குடி- முத்துப்பேட்டை வழியில் உள்ளது கோயிலூர். இறைவன்- அமிர்தலிங்கேஸ்வரர். இறைவி- பிரகன்நாயகி. இங்குள்ள பெரிய சிவலிங்கத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. மழை பொய்க்கும் காலங்களில் இந்த லிங்கத்தைச் சுற்றி மூவாயிரம் லிட்டர் தண்ணீரை நிரப்பி, ஈசனை வழிபட மழை பெய்யும் அற்புதம் நிகழ்கிறது. உடலில் வடுக்களும் தழும்புகளும் உள்ளவர்கள் இங்குள்ள ஈசனை வழிபட நல்ல பலன்கள் கிட்டுகிறதாம்.