செந்தூர விநாயகர்!
ADDED :4139 days ago
ஆஞ்சநேயருக்கு செந்துõரம் பூசி அலங்கரிப்பது போல, திருவண்ணாமலை கோயிலில் உள்ள விநாயகருக்கு செந்துõரம் பூசுகிறார்கள். சம்பந்தாசுரனை விநாயகர் வதம் செய்தபோது, அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார். இதன் அடிப்படையில் சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஓர் நாள் என வருடத்தில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்துõரம் சாத்தும் வைபவம் நடக்கும்.