நந்தி பூஜை!
ADDED :4139 days ago
திருவண்ணாமலையிலுள்ள நந்திக்கு மாட்டுப் பொங்கலன்று விசேஷ பூஜை நடக்கும். அன்று அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் மற்றும் மாலை அணிவித்து பூஜை செய்வர். அவ்வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார். தனது வாகனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சிவன் இவ்வாறு எழுந்தருளுகிறார்.