தாயை வணங்குவதால் புண்ணியம் கிடைக்குமா?
ADDED :4150 days ago
உங்கள் கருத்துப்படி பார்த்தால் புண்ணியம் கிடைத்தால் தான், தாயையே வணங்க வேண்டும் என்று சொல்வீர்கள் போல! தாயை நீங்கள் வணங்கவும் வேண்டாம், காலில் விழவும் வேண்டாம். அவர்களுக்குரிய அன்றாடத் தேவையை முகமலர்ச்சியுடன் கவனித்தாலே போதும், புண்ணியம் கிடைத்து விடும். இது உங்கள் கணவரின் தாய்க்கும் பொருந்தும். மாமியாரையும் முகம் கோணாமல் தாயாய் கருதி கவனித்துக் கொள்ளவும்.