பாலமுருகன் கோவிலில் சந்தன அலங்காரம்!
ADDED :4001 days ago
விழுப்புரம்: விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ., காலனியில் அமைந்துள்ள பாலமுருகன் கோவிலில் கிருத்திகை பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. காலை சந்தனகாப்பு அலங்காரத்திலும், மாலை வெள்ளி கவசம் அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மகா தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் நடந்தது. ஏற்பாடுகளை ஆலய பொருப்பாளர் வெங்கடேசன் செய்திருந்தார்.