உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நன்மை வேண்டி யாக வேள்வி பூஜை!

உலக நன்மை வேண்டி யாக வேள்வி பூஜை!

ஆத்தூர் : ஆத்தூர் கைலாசநாதர் கோவில் வளாகத்தில், பிரித்தியங்கிரா தேவிக்கு தனிக் கோவில் உள்ளது. நேற்று முன்தினம், கால பைரவாஷ்டமியொட்டி, உலக நன்மை வேண்டி, யாக வேள்வி பூஜை நடந்தது.

யாக குண்டத்தில், வற்றல் மிளகாய் உள்ளிட்ட பூஜை பொருட்களை கொட்டினர். மதியம் ஒரு மணியளவில், பிரித்தியங்கிரா தேவிக்கு, பால், பழம், பன்னீர் என, பல்வேறு அபிஷேகம் செய்தனர். மதியம் 2 மணியளவில், வெள்ளி கவசம், புஷ்ப சிறப்பு அலங்காரத்தில், பிரித்தியங்கிரா தேவி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆத்தூர், தலைவாசல், நரசிங்கபுரம், ராசிபுரம், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

தலைவாசல் அருகே, ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலில், காலபைரவாஷ்டமியொட்டி, ருரு பைரவர், உன்மத்த பைரவர், குரோதான பைரவர், சண்ட பைரவர், காலசம்ஹார பைரவர், பீஷ்ண பைரவர், ஸ்ரீகால பைரவர் என, எட்டு பைரவர் ஸ்வாமிக்கு, அபிஷேகம் நடந்தது. இதில், கால பைரவர், வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, ஸ்ரீ கால பைரவருக்கு, பால், மஞ்சள், தயிர், வெண்ணெய், நெய், தேன் உள்ளிட்ட அபிஷேக பூஜைகள் செய்தனர். பின், சந்தன காப்பு சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீகால பைரவர் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !