தான் தோன்றியம்மன் கோவில் டிச., 25ல் குண்டம் இறங்குதல்!
கோபி : கோபி, மொடச்சூர் தான்தோன்றியம்மன் குண்டம் மற்றும் தேர்த்திருவிழாவில், டிச., 25ல் குண்டத்தில் இறங்குதல் நிகழ்ச்சி நடக்க உள்ளது.
கோபி, மொடச்சூரில் பிரசித்தி பெற்ற தான்தோன்றியம்மன் கோவில் உள்ளது. இங்கோவிலில்,
ஆண்டுதோறும், டிசம்பர் மாதத்தில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடக்கும்.
நடப்பாண்டில் குண்டம் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, கடந்த, பத்தாம் தேதி பூச்சாட்டுதல் விழா துவங்கியது. அதையடுத்து டிச., 22ம் தேதி இரவு, 7 மணிக்கு சந்தனக்காப்பு, 24ம் தேதி காலை, 8 மணிக்கு மாவிளக்கு (பச்சை பூஜை) நடக்கிறது.டிச., 25ம் தேதி அதிகாலை, 3 மணிக்கு அம்மை அழைத்தல், காலை, 7.40க்கு குண்டம் இறங்குதல், 26ம் தேதி மாலை, 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், 27ம் தேதி இரவு, 10 மணிக்கு மலர் பல்லக்கு நடக்கிறது.டிச., 28 காலை, 9 மணிக்கு தெப்பத்தேர் உற்சவம், பகல், 12 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம், டிச., 29ம் தேதி இரவு, 7 மணிக்கு மறுபூஜை நடக்கிறது. 2015 ஜன., 2ம் தேதி இரவு, 7 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
திருவிழா நாட்களில் தினமும் இரவு, 7.30 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் ராமன், ராஜகோபால், செயல் அலுவலர் கங்காதரன் மற்றும் விழாக்குழுவினர்கள் செய்து வருகின்றனர்.