அனுமன் ஜெயந்தி விழா டிச., 21ல் பாலாபிஷேகம்!
ADDED :4083 days ago
சென்னிமலை : சென்னிமலை செல்வஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா, 21ம் தேதி நடக்கிறது.சென்னிமலை, பெருந்துறை மெயின் ரோட்டில், திருமுகம்மலர்ந்தபுரம் அருகே ஸ்ரீசெல்வஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, ஐம்பொன்னால் ஆன ஆஞ்சநேயர் சிலை அமைந்துள்ளது. இங்கு, 21ம் தேதி அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, விழா நடக்கிறது.அன்று காலை, ஏழு மணிக்கு பால் அபிஷேகம் நடக்கிறது. அதை தொடர்ந்து சிறப்பு அலங்கார தரிசனம், மகா தீபாராதனை, பிராசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, அமாவாசை சிறப்பு வழிபாட்டு குழுவினரால், பூஜை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.ஏற்பாடுகளை, சென்னிமலை செல்வஆஞ்சநேயர் கோவில் சேவாடிரஸ்ட் தலைவர் நடேசன், பொருளாளர் பழனிவேலு ஆகியோர் தலைமையில், நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.