உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை அரவணை, அப்பம் தயாரிக்க தயாராகும் மதுரை வெல்லம்!

சபரிமலை அரவணை, அப்பம் தயாரிக்க தயாராகும் மதுரை வெல்லம்!

மதுரை : மதுரையில் தயாரிக்கப்படும் மலையாள வெல்லம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசாதமாக வழங்கும் அரவணை, அப்பம் தயாரிக்க பெருமளவு அனுப்பப்படுகிறது.

மலையாள வெல்லம் எனும் சுவை மிகுந்த வெல்லத்தை மதுரை அலங்காநல்லுார் பகுதியில் சிலர் உற்பத்தி செய்கின்றனர். ஆண்டு தோறும் நவம்பர் முதல் பிப்ரவரி வரை வெல்லம் தயாரிக்கப்படுகிறது. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் வெல்லம் தயாரிப்பு அமோகமாக நடக்கிறது.

வேல்சாமி, விவசாயி, மதுரை: திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வாழைப்பழம் தேன் சுவையுடையது. இவை பழநி கோயில் பஞ்சாமிர்தம் தயாரிப்பில் பயன்படுத்துகின்றனர். மதுரை மண்ணில் விளைவிக்கப்படும் கரும்பும் தேன் சுவையுடையது. இதன் காரணமாகவே சபரிமலை பிரசாதம் தயாரிப்பில் மலையாள வெல்லம் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. பல நாட்கள் கெட்டுப்போகாத வகையில் தயாரிக்கிறோம். 30 கிலோ சிப்பம் ரூ.350 முதல் ரூ.450. தொடர்புக்கு 98421 44822ல் விவரமறியலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !