உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 155வது உழவாரப்பணி!

இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 155வது உழவாரப்பணி!

இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் உழவாரப்பணி சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள  கோவில்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உழவாரப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் கோவில் பராமரிப்பு அற்ற நிலையில் மற்றும் நித்திய  பூஜை நடைபெறாத நிலையில் உள்ள ஆல<யங்களை பார்வையிட்டு விவரம் அறிந்து அனைத்து அடியார்களுக்கும் நோட்டீஸ் மூலமாக தெரிவிக்கப்படும். அக்கோவில் பிரகாரம் சுத்தம் செய்தல், சுண்ணாம்பு அடித்தல், பிரகாரத்தில் தேவாரம், திருவாசகம், திருமுறை பாடல்களை எழுதுதல் போன்ற பணிகள் நடைபெறும். இதுவரை 154 கோவில்களில் உழவாரப்பணி செய்<யப்பட்டுள்ளது. இந்த உழவாரப்பணியில் இன்று 600க்கும் மேற்பட்ட அடியார்கள் சென்னையில் இருந்து கலந்து கொண்டு நடந்து வருகிறது. திருநாவுக்கரசர் என்ற அப்பர் பெருமானால் துவங்கப்பட்ட உழவாரப்பணியை தொடர்ந்து அடியார்களுடன் உழவாரப்பணியில் கலந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் அனைவரும் வருகை தந்து இறைபணி செய்து இறைவனின் திருவருள் பெறலாம். வருகிற 28.4.2014  அன்று, சென்னை, கொரட்டூர் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலில், 155 வது  உழவாரப்பணி நடைபெற இருக்கிறது.  காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உழவாரப்பணி. மதி<யம் 2 மணிக்கு அடியார் தமை அமுது செய்வித்தல். தொடர்ந்து உழவாரப்பணி திருக்கூட்டம். மாலை 5 மணிக்கு அடியார் பெருமக்கள் அனைவரும் இறைவர் திருமுன்பு கூட்டு வழிபாடு. அதன்பின் அடியார்கள் அனைவரும் ஒன்றாக புறப்படுவார்கள்.புறப்படும் இடங்கள்*வடபழநி(வேங்கீஸ்வரர் திருக்கோயில்)*பெருங்களத்துõர்(ஐ. ஓ.பி பேங்க் வாசல்)*பெரம்பூர் ரமணா நகர்(துர்கா மெடிக்கல்ஸ்)*சூளைமேடு பஜனை கோயில்*கோ<யம்பேடு(குறுங்காலீஸ்வரர் திருக்கோயில்)*அனகாபுத்துõர்(முருகன் கோயில் அருகில்)*அம்பத்துõர்(கணேஷ் டிம்பர் அருகில்)*பவுஞ்சூர்(செய்யூர் தாலுக்கா)தொடர்புக்கு: எஸ். கணேசன், நிறுவனர், இந்து ஆல<யங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம், மொபைல்: 9840123866.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !