உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் கோவிலில் ஆருத்ரா தரிசனம்!

சிவன் கோவிலில் ஆருத்ரா தரிசனம்!

விழுப்புரம்: விழுப்புரம் பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. விழுப்புரம் பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில் திருவாதிகை நட்சத்திரம், பவுர்ணமி சேர்ந்து வந்ததை யொட்டி, நேற்று ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதையொட்டி காலை 7:00 மணிக்கு சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் உற்சவர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து பகல் 12:00 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மதியம் 1:00 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னாள் நகர் மன்ற சேர்மன் ஜனகராஜ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !