உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் பெருமாள் கோவிலில் 10ம் ஆண்டு ரதசப்தமி!

விழுப்புரம் பெருமாள் கோவிலில் 10ம் ஆண்டு ரதசப்தமி!

விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்ட வாசப் பெருமாள் கோவிலில் வரும் 26ம் தேதி 10ம் ஆண்டு ரதசப்தமி விழா  நடக்கிறது. விழுப்புரம் வைகுண்ட  வாசப் பெருமாள் கோவிலில் வரும் 26ம் தேதி ரதசப்தமியை முன்னிட்டு காலை  6:00 மணிக்கு சூரிய பிரபை,  வாகனத்திலும், 9:00 மணிக்கு  அனுமந்த வாகனம், 10:30 மணிக்கு சேஷ வாகனம், 12:30 மணிக்கு கருட வாகனம், மாலை 4:00 மணிக்கு யானை வாகனம், 5:30 மணிக்கு கற்பக  விருட்ச வாகனம் மற்றும் 7:00 மணிக்கு சந்திர பிரபை வாகனத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை  செயல் அலுவலர் முத்துலட்சுமி மற்றும் தக்கார் சரவணன், ஆலய அர்ச்சகர் வாசு பட்டாச்சாரியார் மற்றும் ஆலயப் பணியாளர்கள் செய்து வரு கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !