லட்சுமி நாராயண பெருமாள் கோவில் மண்டலாபிஷேகம் நிறைவு!
ADDED :3918 days ago
திருவள்ளூர்: திருவள்ளூர், லட்சுமி நாராயண பெருமாள் கோவில் மண்டலாபிஷேகம், நிறைவு பெற்றது. திருவள்ளூர், லட்சுமிபுரம், கிருஷ்ணர் ÷ காவில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், கடந்த டிசம்பர் 1ம் தேதி நடந்தது. அதன் பின், 48 நாள் மண்டலாபிஷேகம் துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. மண்டலாபிஷேக பூர்த்தி விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம், மாலை 6:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, பகவத் பிரார்த்தனை சங்கல்பம், மகா சாந்தி ஹோமம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமி நாராயண பெருமாள், விநாயகர், கருடாழ்வார், அனுமார், அய்யப்பன், விசேஷ அலங்கார திருமஞ்சனமும், அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து, மகா சாந்தி ஹோமம், திருமஞ்சன அபிஷேகம் முடிந்ததும், மூலவருக்கு அலங்காரம் அனுக்கிரகம் சாற்று முறை நடந்தது.