பெரியநாயகி அம்மன் கோவிலில் தை அமாவாசை பூஜை!
ADDED :3914 days ago
தியாகதுருகம்: சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் தை அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது. தியாகதுருகம் அடுத்த பெரியநாயகி அம்மன் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு மூலவர் அம்மன் சிலைக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. கருவறையில் உள்ள புற்றுக்கு மலர் அலங்காரம் செய்து வழிபாடு நடந்தது. இரவு உற்சவர் அம்மன் சர்வ அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அம்மன் பாடல்களை பாடி தாலாட்டி ஆராதனை நடந்தது. பெண்கள் கும்மியடித்து அம்மனுக்கு பூஜைகள் செய்தனர். தர்மகர்த்தாக்கள் பாஞ்சலை, கோவிந்தசாமி, கண்ணன், பூசாரிகள் தமிழ்செல்வன், குமார், நாராயணன், சங்கர் பூஜைகளை செய்தனர்.