அங்காளம்மன் கோவிலில் தீச்செட்டி ஏந்தி ஊர்வலம்!
ADDED :3906 days ago
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை செட்டி தெருவிலுள்ள அங்காளம்மன் கோவிலில் தை மாத அமாவாசையொட்டி பக்தர்கள் தீச்செட்டி ஏந்தி கோவிலுக்குள் வலம் வந்தனர். உளுந்தூர்பேட்டை செட்டி தெருவிலுள்ள அங்காளம்மன் கோவிலில் தை மாத அமாவாசையொட்டி நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க.,முன்னாள் நகர செயலாளர் செல்லையா செய்திருந்தார். நள்ளிரவு 12 மணிக்கு பூஜைகளும், பக்தர்கள் தீச்செட்டி ஏந்தி கோவிலுக்குள் வலம் வந்தனர். சிறப்பு அலங்காரத்தில் சுவாமி கோவிலுக்குள் வலம் வந்தது.