உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தாத்தூரில் தைப்பூசம்!

சித்தாத்தூரில் தைப்பூசம்!

கண்டாச்சிபுரம்: சித்தாத்தூர் பாலதண்டாயுத பாணி கோவிலில் தைப்பூச காவடி மகோற்சவம் நடந்தது. கண்டாச்சிபுரம் அடுத்த சித்தாத்தூர் கிராமத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச காவடி விழா நடந்தது. காலை 7 மணிக்கு விநாயகர் பூஜை, பாலதண்டாயுத பாணி சுவாமிக்கு சந்தன அலங்காரம், மஞ்சள் இடித்தல், அக்னி கரகம் எடுத்தல், வேல் அணியும் நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்கள் தேர் இழுத்து வந்தனர். இரவு மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !