உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை முருகன் கோவில்வரும் 7ம் தேதி மகாதரிசனம்!

சென்னிமலை முருகன் கோவில்வரும் 7ம் தேதி மகாதரிசனம்!

சென்னிமலை:சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச விழாவின் முக்கிய விழாவான மகாதரிசனம், வரும், 7ம் தேதி இரவு நடக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் புகழ் பெற்ற முருகன் தலமாக திகழம் சென்னிமலையில், பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், தைப்பூச விழா, பிரதானமானது. 15 நாட்கள் நடக்கும் இவ்விழாவில், கரூர், திருப்பூர், கோவை என பல மாவட்ட பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வர்.இந்தாண்டு தைப்பூச விழா, கடந்த ஜனவரி, 26ம் தேதி துவங்கியது. 3ம் தேதி தேரோட்டம் துவங்கி, நான்கு ரதவீதிகளில் வலம் வந்து, நேற்று மாலை, நிலையை அடைந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இன்று, இரவு பரிவேட்டை குதிரை வாகன காட்சியும், நாளை, இரவு தெப்போற்சவம், பூதவாகனக்காட்சி நடக்கிறது.வரும், 7ம் தேதி மகாதரிசனம் நடக்கிறது. அன்று காலை, காலை வள்ளி,
தெய்வானை சமேத முத்துகுமாரஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இரவு, 7 மணிக்கு நடராஜ பெருமானும், சுப்பிரமணிய ஸ்வாமியும் முறையே, வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதியுலா காட்சி, இரவு முழுவதும் நடக்கும். இதை காண, சென்னிமலையில், பல ஆயிரம் பேர் கூடுவர். மறுதினம், அதிகாலை, 5 மணி வரை ஸ்வாமி திருவீதியுலா நடக்கும். 8ம் தேதி மஞ்சள் நீர் அபிஷேகத்துடன், விழா நிறைவு பெறுகிறது.ஏற்பாடுகளை கோவில் தக்கார் சபர்மதி, செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !